திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் மாணவியர் பாத்திரம் துலக்கும் அவலம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே ஆசிரியை ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் பள்ளி மாணவியர் வீட்டு வேலை செய்யும் அவலம் தினமும் நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு மூன்று மாணவியர் பள்ளி சீருடையில் ஆசிரியை வீட்டில் இருந்த பாத்திரங்களை துலக்கினர். இதுபோன்று மாணவியர் பலருக்கு இந்த ஆசிரியை தனது வீட்டு வேலைகளை பகிர்ந்தளித்துள்ளார்.
தன் வகுப்பில் படிக்கும் மாணவியரை வீட்டு வேலைக்கு ஆசிரியை பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி பாதித்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான், கல்வியில் பின் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்ற முடியும்.
Filed under: கல்வி | Leave a comment »